ஒரு நாளு நைட்டு பதினொன்னு.. பதினொன்றை.. இருக்கும்.. நான் என் பெட்ரூம்ல தூங்கிக்கிட்டு இருந்தேன்.. திடீர்னு பெட்ரூம் கதவை யாரோ தள்ற மாதிரி இருக்கவும், படக்குன்னு திரும்பி பாத்தேன். பாத்தா..!! இவன் பேயறைஞ்ச மாதிரி நின்னுக்கிட்டு இருக்கான். முகம் புல்லா ஒரே வேர்வை..!! எனக்கு ஒன்னும் வெளங்கலை..!!
“என்னடா அசோக்..? இந்த நேரத்துல..?”