பருவ மழை பாதுகாப்பிற்கு சித்தப்பாவிடம் சுகமாய் சரண் அடைந்தேன்!

கடந்த முறை வடகிழக்கு பருவமழையில் வீடு முழ்கி பெரும் பணகஷ்டத்தையும், மனகஷ்டத்தையும் தந்ததால் இந்த முறை பருவ மழை தொடங்குவதற்கு முன்னரே பெட்டி படுக்கையோடு பாதுகாப்பான புறநகரில் உள்ள என் சித்தப்பா வீட்டிற்கு வந்து விட்டேன். என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் கடந்த முறை தனியாக குழந்தைகளோடு மழை வெள்ளத்தில் மாட்டி கொண்டேன்.