அப்புறம் ஒரு இரண்டு நாளைக்கு மணியிடம் இருந்து ஃபோனையே காணோம். அவன் ஆஃபீஸுக்கு ஃபோன் செய்தால் லீவில் இருக்கிறான். என்றார்கள். இவன் நாம் சொன்னதை வைத்து ஏதாவது ஏடாகூடமாகச் செய்து விட்டானோ என்று யோசித்தேன். தயங்கிக் கொண்டே அடுத்த நாள் காலை அவன் வீட்டுக்கு ஃபோன் செய்தேன். அவனே ஃபோனை எடுத்தான்.