ஐயோ அக்கா என்னால முடியல ஆ….ஆ….. என்னை விடுடி என்னால முடியல ஐயோ ஆ…ஆ…!

சென்னை மயிலாப்பூர் கூவம் நதிக்கரையில் உள்ள அம்பட்ட வாரவதியின் ஓரத்தில் இருக்கும் தொகுப்பு வீட்டில் வசிப்பவர்கள் சாந்தாவும் அவள் கணவன் மாரிமுத்துவும். சாந்தா சற்று வசதி மிகுந்த நாலு வீட்டில் வேலை பண்ணுகிறாள். மாரிமுத்து – மாரி – ஒரு சேட்டின் தயவால் ஒரு சைக்கில் ரிக்ஸா வாங்கி ஒட்டி கொண்டு இருக்கிறான். இவர்கள்
வீட்டில் மாரியின் அம்மாவும் இருக்கிறாள். வருடத்தில் சுமார் நாலு மாதம் மாரியின் தம்பி சுடலை முத்துவின் வீட்டில் போய் இருப்பாள். இவர்கள் இருப்பது ஒரு சின்ன வீடு. ரெண்டே ரெண்டு ரூம்தான். அதில்தான் மூவரும் படுக்க வேண்டும்.