நீ – 89

நீ – 89

Mulai Paal ஞாயிற்றுக் கிழமை..! மதிய உணவுக்குப் பின்.. என் மனைவியிடம் சொல்லிக்கொண்டு நான் என் வீட்டிற்குப் போனபோது… மேகலா வீட்டில் கொஞ்சம் கூட்டமாகத் தெரிந்தது..!! அதிக கூட்டம் இல்லை..! ஒரு சில பெண்கள் மட்டும் இருந்தார்கள்..! எல்லாம் இதே தெருவைச் சேர்ந்த பெண்கள்தான்..!
நான் டிவியைப் போட்டு விட்டு உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில்.. ஜன்னல் அருகே வந்து..
” எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டாள் மேகலா

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

நான் எழுந்து ஜன்னல் பக்கத்தில் போனேன்.
”ம்.. ம்ம்..! நான் நல்லாருக்கேன்..! என்ன விசேசம் வீட்ல..?”

முகம் முழுவதும் பிரகாசம் பொங்க.. ”பொண்ணு பெரிய மனுஷி ஆகிட்டா..” என்றாள்.

”யாரு கஸ்தூரியா..?”

” ம்.. ம்ம்…!!”

”அட.. எப்ப…?”

” இன்னிக்கு காலைலதான்..! பத்து மணிக்கு..!”

”ஓ..! ”

அவளே ”பெருசா சீரெல்லாம் எதும் பண்றதில்ல..! ஒரு வாரம் உக்கார வெச்சு தண்ணி ஊத்தி வீடு பூத வெச்சிட வேண்டியதுதான்.! என் தம்சிக்கு சொல்லியிருக்கேன்..! வந்துட்டிருக்காங்க..!!” என்றாள்.

சிறிது நேரம்.. அவளது பெண் பெரிய மனுஷி ஆனதுபற்றி பேசிவிட்டுக் கேட்டாள்.
”அப்பறம் நிலா எப்படி இருக்கு..?”

” ம்.. ம்ம்..! பரவால்ல..!”

” நடக்குதா…நல்லா..?”

” ம்..ம்ம்..! ஓரளவு தேறிட்டா..!!”

” அப்பறம்.. இங்ககூட அதிகமா வர்றதில்ல போலருக்கு..?” என்று கொஞ்சம் தணிந்த குரலில் கேட்டாள்.

”இல்ல.. இந்த நேரத்துல.. அவ பக்கத்துல இருந்தா.. அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். ”

”ம்.. ஆமா..! போயிருவீங்களா..?”

”ம்.. ம்ம்..! சும்மா பாத்துட்டு போலாம்னுதான் வந்தேன்..! நீங்க எப்படி இருக்கீங்க..?”

” ஓ..! சூப்பரா இருக்கேன்..!”

”ம்.. ம்ம்..! பாத்தாலே தெரியுது..!”

”என்ன தெரியுது..?”

” நீங்க சூப்பரா இருக்கறது..?”

”உங்கள மட்டும்.. திருத்தவே முடியாது..!” என்று விட்டுப் போனாள்..!

நான் வீட்டைக் கொஞ்சம் சுத்தம் செய்து விட்டு.. நான் என் மனைவியிடம் போனபோது.. அவள் சுக்கர் வைத்து தன் முலைப்பாலை வெளியேற்றிக் கொண்டிருந்தாள்..!
அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து..
”இது.. எப்பத்தான் நிக்கும்..?” என்று கேட்டேன்.

லேசாக புன்னகைத்து விட்டு.. ”நின்றும்..” என்றாள்.

”அப்பறம்..! ஒரு நல்ல விசயம்.

.!” என்றேன்.

”என்ன..?” என்று என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

”கஸ்தூரி ஏஜ் அட்டன் பண்ணிட்டாளாம்..!”

”ஓ..! எப்ப..?”

” இன்னிக்குத்தான்.. காலைல..!”

”நீங்க போய் பாத்தீங்களா..?”

” ஏய்..’ இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம்.. நீ இருந்தாகூட தெரியாது..!”

”சீர் பண்றாங்களா..?”

” பெருசா இல்ல..! தலைக்கு தண்ணி ஊத்தறதோட.சரியாம்..!!”

” சரி.. ஈவினிங் போய்ட்டு வரலாம்..!!” என்றாள்.

” ம்.. ம்ம்..! போலாம்..!!”

அவளுடன் சேர்ந்து.. இரவில் போய் கஸ்தூரியைப் பார்த்துவிட்டு வந்தோம்..!!

என் மனைவி குணமடைந்து..உடல் நலம் தேறி.. என்னுடன் வந்து விட்டாள்..!
அவள் குணமடைந்து விட்டாலும்.. அவளிடம் முன்பிருந்த விளையாட்டு.. குறும்பு.. அதிகமான துருதுருப்பு.. இவைகள் எதுவும் இல்லை..!
நிறையவே மாறிப்போயிருந்தாள்..! வெளியில் சொல்லாவிட்டாலும் அவள் மனதுக்குள் வேதணைப் பட்டுக்கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது..!

பேதைப் பெண்.. சொன்னால் கேட்டால்தானே..? என் ஆறுதல் வார்த்தகளும்.. அன்பு மொழிகளும் அப்போதைக்கப்போதுதான்..! அடுத்த மணியிலேயே நான் சொன்னவைகளை மறந்து விட்டு.. மறுபடியும் கவலை மேகங்கள் கருத்தரித்த முகத்துடன் இருப்பாள்..! அந்த கவலை மேகத்தின்.. துளிகளில் அவ்வப்போது நானும் நனையத்தான் செய்தேன்..!!

அன்று காலை !!
நான் ஸ்டேண்டுக்கு கிளம்பியபோது என் மனைவி சொன்னாள்..!
”வர்றப்ப.. ஒரு காரியம் பண்ணுங்க..”

”என்ன..?”

”தாமரையை நைட்டு.. வரச்சொல்லுங்க..!”

”ம்..ம்ம்..!”புருவங்களை உயர்த்தினேன் ”எதுக்கு..?”

”சும்மாதாங்க.. அவளை பாக்கனும்..!” என்று சிரித்தாள்.

”சரி..!”என்றேன் ”வேற என்னமாவது வேனுமா..?”

தலைய்ட்டி.. ”உங்க முத்தம் மட்டும்..!!”என்றாள்.

அவளை அணைத்து முத்தமிட்டு.. விடைபெற்றுக் கிளம்பினேன்..!!

அன்று மாலைவரை.. உன்னைப் பார்க்க வர எனக்கு நேரம் கிடக்கவில்லை..!
இரவில் உன் வேலை முடியும் தருணத்தில்தான் உன்னைப் பார்க்க வந்தேன்..!
நான் வந்தபோது மிகச்சரியாக நீயே வேலை முடிந்து தோளில் பையுடன் வெளியே வந்தாய்..!
நான் உன் முன்பாக காரை நிறுத்தி… கதவைத் திறந்து விட்டேன்.
”உக்காரு வா…!!”

நீ சிரித்த முகத்துடன் உள்ளே உட்கார்ந்தாய்.
”என்னை பாக்கவா வந்தீங்க..?”

” ம்..

ம்ம்..!!” காரை நகர்த்தினேன் ”வேலை முடிஞ்சுதா..?”

” இப்பதாங்க… முடிஞ்சு வர்றேன்..!” என்றாய்.

”இப்ப எங்க போறோம் தெரியுமா..?” என்று கேட்டேன்.

”எங்கீங்க…?”

” என் வீட்டுக்கு..” என்றேன்.

நீ பேசவே இல்லை.

நானே! ”நிலா இங்கதான் இருக்கா..” என்றேன்.

நீ திடுமென முன்னால் நகர்ந்து வந்து.. ”இப்ப.. அக்காவ பாக்கங்களா போறோம்..?” என்று கேட்டாய்.

”ம்.. ம்ம்..! அவதான்.. உன்னை பாக்கனும்னா…”

”என்ன விசயங்க…?”

” ஏன்டி… விசயமிருந்தாத்தான் வருவியா..?”

”ஐயோ..! அதில்லீங்க..! தப்பா நெனச்சுக்காதிங்க..! ஒரு இதுல கேட்டுட்டேன்..! அப்படியே கொஞ்சம் காரை ஓரமா நிறுத்துனீங்கன்னா….”

”ஏன்டி…?”

”அக்காவ பாக்க… வெறுங்கையோட போக வேண்டாங்க…!!” என்றாய்.

நீ சொன்ன இடத்தில் காரை ஓரம் கட்டி நிறுத்தினேன்.
நீ காரை விட்டு இறங்கி.. அருகில் இருந்த பழக்கடைக்குப் போனாய்.
சில நிமிடங்கள் மெனக்கெட்டு
பூ… பழங்கள்… ஸ்வீட்டெல்லாம் வாங்கி வந்தாய்..!
காரில் உட்கார்ந்து ”போலாங்க…” என்றாய்.

நான் சற்று வியந்து… ”ம்..ம்ம்.. தேவலையே..” என்றேன்.

”என்னங்க…?”

” நீ… தேறிட்ட…” என்க..

”எனக்கு.. என்னமோ… கை.. காலெல்லாம் படபடனு ஒதறுதுங்க…!!” என்றாய்…!!!!

– சொல்லுவேன். …!!!!

NEXT PART