வாசுவுக்கு உறக்கம் வரவில்லை. அது புது இடம் என்பதால் மட்டுமல்ல, தலைக்குமேல் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியையே குறிக்கோளின்றி வெறித்தபடி படுத்திருந்தான். பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டவனாய்ப் பரிதவித்துக் கொண்டிருந்தான். ‘எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய அக்கா, இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாளே?’ நினைக்க நினைக்க வாசுவுக்கு அனுதாபமும், அவசரத்தில் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு இப்போது அல்லல்படும் அக்காவின் மீது சற்று எரிச்சலும் ஏற்பட்டது.