மாமனார் எங்கள் வீட்டு மாடியில் ஒரு திருமண தகவல் நிலையம் நடத்தி வந்தார். அவர் ஒரு பெரிய அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார். மேலும் அவருக்கு இருந்த நட்பு வட்டம், செல்வாக்கு மற்றும் பல்வேறு வகையான மக்களின் தொடர்பால் அவருக்கு திருமண தகவல் மையம் ஆரம்பிக்கும் ஆசை வந்தது. நான் கம்ப்யூட்டர் டிகிரி முடித்து இருந்ததால் என்னிடம் ஆலோசனை கேட்டார்.