கற்பகம் இன்னைக்கு பரீட்சை முடிவு வருதே எங்கே போனா உன் அருமை பொண்ணு கேட்டுகிட்டே காலை உணவு சாப்பிட அமர்ந்தார் விஷ்ணு. கற்பகம் பூஜை அறையில் கல்பனாவுக்கு விபூதி வச்சு அவளிடம் நல்லா வேண்டிக்கோ இந்த முறையாவது பாஸ் செய்யணும்னு வயசு பதினெட்டு ஆகுது இப்போதான் இந்த +2 முடிக்க போறியா என்றும் முணுமுணுத்தா. கல்பனா அம்மா சொல்லுவதையோ பரீட்சை முடிவு பற்றியோ கொஞ்சம் கூட கவலை படாமல் டைனிங் டேபிள் கிட்டே போனா. விஷ்ணு அவளிடம் என்னமா பாஸ் பண்ணிடுவியான்னு கேட்க அவ உம் என்று மட்டும் சொல்லிவிட்டு தட்டில் நாலு இட்டிலி எடுத்து வச்சு சாப்பிட ஆரம்பித்தா. கற்பகம் டேபிள் அருகே வந்து கல்பனா முதுகில் ஆதரவா தடவி குடுத்து கல்பு வேணும்னா அப்பாவை கூட வர சொல்லவா என்றதும் கல்பனா அதெல்லாம் வேண்டாம் ஒரு வேளை பெயில் ஆனா இவர் வழி முழுக்க கத்திகிட்டே வருவார். நானே பார்த்துட்டு வரேன் என்று மறுத்தா. கற்பகம் அதுக்கு இல்லடி பெயில் ஆனா நீ ஏதாவது விபரீத முடிவுக்கு போக கூடாது அதுக்கு தான் என்றதும் விஷ்ணு கற்பகத்தை கடிந்து கொண்டு அறிவு இருக்கா உனக்கு ஒரு குழந்தை கிட்ட பேசற பேச்சா இது கல்பு செல்லம் இம்முறை தேறிடுவா என்றார். அவர் சொன்னது பரிட்சையில் தேறுவது பற்றி ஆனா கல்பனா ஏற்கனவே வேற விஷயத்தில் தேர்ந்து விட்டா. அது என்ன அது தாங்க கதையே மேலே படிங்க.
கல்பனா ஏதோ பார்ட்டிக்கு கிளம்புவது போல அலங்கரித்து கொண்டு மூன்றாவது முறையாக +2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கிளம்பினா. வெளியே போகும் போது அம்மா நான் கிளம்பறேன் லேட்டா வந்தா கவலை படாதீங்க முடிவு பாஸ்ன்னு வந்தா என் தோழி வீட்டுக்கு போவேன் என்றபடி வீட்டில் இருந்து இறங்கினா. அவ வெளியே சென்றதும் கற்பகம் மனசு கேட்காமல் கணவனிடம் ஏங்க நீங்க கூட போங்க ஏதாவது ஆக போகுது எனக்கு பயமா இருக்கு என்று விஷ்ணுவை கிளப்ப அவரும் சட்டையை மாட்டி கொண்டு கிளம்பினார். தெரு முனையில் கல்பனா ஒரு பைக்கில் ஏறுவதை பார்த்தார். அவரே இப்போது தான் பார்க்கிறார் என்றாலும் சிலர் இதற்கு முன் சொல்லி இருக்காங்க முகத்தை தொங்க போட்டு கொண்டு வீட்டிற்குள் நுழைய கற்பகம் என்னங்க வந்துட்டீங்க என்றதும் விஷ்ணு அவ எவன் கூடவோ போற என்னை ஆட்டோ பிடிச்சு பின்னாடி போக சொல்லறீயா என்று கோபமாக பதிலளித்தார். கற்பகம் என்ன சொல்லறீங்க யார் கூட போறா இப்படி பொறுப்பு இல்லாம சொல்லறீங்க என்று கத்த விஷ்ணு ஒன்றும் சொல்லாமல் அவர் வேலைக்கு கிளம்ப தயாரானார்.