அப்போது மிருகேந்திரா அங்கே வந்தான். நான் குளிப்பதை பார்த்துவிட்டு, “சாப்! வீட்டை சுத்தம் பண்ணிட்டேன். மண் பூசி ஒரு தீயறை தயார் பண்ணிட்டேன். இனி நீங்க அங்கேயே கட்டை கொளுத்திக்கலாம். கட்டைகளையும் பிளந்து வச்சிருக்கேன்” சொல்லிவிட்டு விர்ரென கிளம்பிவிட்டான். மேலே வானம் இருட்ட துவங்கியது. நான் குளித்து முடித்து என் மரவீட்டிற்கு போகும் போது இருட்டிவிட்டது. மிருகேந்திரா அவன் கற்களால் கட்டி மண்பூசிய தீயறையில் கட்டைகளை போட்டு தீ மூட்டியிருந்தான்.