ஊரில் மாமனாரோட ஒரு வருட நினைவு நாள் விசேஷத்திற்கு ஒரு வாரம் முன்பே என் கணவர் என்னை மாமனார் வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு திரும்பிவிட்டார். மாமியார் மட்டும் தனியாக இருந்ததாலும், உறவினர்கள் வந்து போவார்கள் மேலும் விசேஷத்திற்கும் மாமியாரோடு 10 நாட்கள் தங்கியிருந்தேன். மாமனார் இறந்து போய் ஒரு வருடம் ஓடிப்போனாலும் மாமியார் அதே சோகத்தோடு தான் இருந்தார்.